24 668cbf856ebd8
இலங்கைசெய்திகள்

இலங்கை சிக்காகோவாக மாற்றமடைந்துள்ளது: அத்துருகிரிய தாக்குதலுக்கு கண்டனம்

Share

இலங்கை சிக்காகோவாக மாற்றமடைந்துள்ளது: அத்துருகிரிய தாக்குதலுக்கு கண்டனம்

சிக்காககோவில் போன்று இலங்கையில் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக கடுவெல பதில் நீதவான் பீ.ஜீ.பி. கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

அத்துருகிரிய பிரதேசத்தில், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற இடத்தை நேரில் பார்வையிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“இது ஓர் ஆபத்தான நிலைமை. பொதுமக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்பதே இந்த சம்பவத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கும் பொலிஸ் நிலையத்திற்கும் இடையில் ஒரு கிலோ மீற்றர் தூரமே காணப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வந்தார்கள் சுட்டார்கள் சென்றார்கள் என்ற நிலைமை காணப்படுகின்றது.” என்றார்.

சிக்காகோ அதிகளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே பதில் நீதவான் இலங்கையை சிக்காகோவாக ஒப்பீடு செய்து கருத்து வெளியிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...