Connect with us

இலங்கை

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க ரணில் மீண்டும் முயற்சி! சஜித் குற்றச்சாட்டு

Published

on

3 6 scaled

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க ரணில் மீண்டும் முயற்சி! சஜித் குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவரது அடிமைகளும் அரசமைப்பை மீறி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க மீண்டும் முயற்சித்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் அரசின் சதி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பில் இருந்து நேற்று (03) விசேட அறிவிப்பொன்றை விடுத்தே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“கடந்த காலங்களில் ஜனாதிபதியையும் அரசையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அடிமைகளும், கையாட்களும், சகாக்களும் நாட்டுக்கு எதிர்மறையான செய்திகளை முன்வைத்து ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது என்ற கருத்தை உருவாக்கி வந்தனர்.

பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இது சரியான தருணம் அல்ல என மக்களை நம்பவைக்கும் வகையில் அரசியல் செயற்திட்டமொன்றை முன்னெடுக்க ஜனாதிபதியும் அவருக்கு நெருக்கமான குழுக்களும் முயற்சித்தன.

இவ்வாறான நிலையில் இன்று சட்ட ரீதியாகவும் அரசமைப்பு ரீதியாகவும் நடத்தப்பட வேண்டிய ஜனாதிபதித் தேர்தலை பறிக்க மேலும் பல முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அரசமைப்பை மீறும் சதிகளாகும்.

எதிர்வரும் செப்டெம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசமைப்பு தெளிவாகக் கூறினாலும், அரமைப்பு ரீதியாக புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் நாட்டு மக்களுக்கு இருக்கும் உரிமையை இல்லாதொழித்து, சீர்குலைக்கச் சில குழுக்கள் செயற்பட்டு வருகின்றன.

இந்நாட்டில் சர்வஜன வாக்குரிமையும் மக்களின் வாக்குரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

மாளிகைகளுக்குள் இருந்து கொண்டு மானங்கெட்ட சதிகள் மூலம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான பின்னணி தயார்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், இந்நாட்டில் ஜனநாயகத்தின் மரணத்தை முன்னெடுக்க வேண்டாம் எனப் பொறுப்புள்ள அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

தேர்தல் உரிமையை உடனடியாக மக்களுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்.

அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சுதந்திரமான மற்றும் ஜனநாயக ரீதியாக தேர்தலொன்றை நடத்துவதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளையும், ஜனநாயகம் என்ற பெயரில் பயப்படாமலும், அடிமைப்படாமலும் 220 இலட்சம் நாட்டு மக்களுக்காக வேண்டி எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழு மற்றும் இது தொடர்பான அனைத்து அதிகாரிகளிடமும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அரச இல்லங்களில் நடக்கும் சதிகளை முறியடிக்க வேண்டும்.

இதன் பொருட்டு அனைத்துச் சக்திகளையும் ஒன்று திரட்டி, மக்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு ஜனநாயகத்தை பாதுகாக்கும் பயணத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் தயார்” என தெரிவித்துள்ளார்.

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்17 மணத்தியாலங்கள் ago

12 ஆண்டுகு பிறகு உருவாகும் குரு மங்கள யோகம் : அதிர்ஷ்ட மழை பெறும் 5 ராசிகள்

12 ஆண்டுகு பிறகு உருவாகும் குரு மங்கள யோகம் : அதிர்ஷ்ட மழை பெறும் 5 ராசிகள் ரிஷப ராசியில் குரு பகவான் மற்றும் செவ்வாய் சேர்க்கை...

இலங்கை1 நாள் ago

2024 இற்கான பிரபலமான விளையாட்டு நட்சத்திரம் : இலங்கை வீரருக்கு கிடைத்த விருது

2024 இற்கான பிரபலமான விளையாட்டு நட்சத்திரம் : இலங்கை வீரருக்கு கிடைத்த விருது இலங்கை (Sri Lanka) கிரிக்கட் வீரர் மதீஷ பத்திரணவிற்கு (Matheesha Pathirana) இந்தியாவில்...

Rasi Palan new cmp 8 Rasi Palan new cmp 8
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 05 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 05 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசி பலனை (ஜூலை 5, 2024...

Rasi Palan new cmp Rasi Palan new cmp
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 04 ஜூலை 2024 -துலாம் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம்

​இன்றைய ராசி பலன் 04 ஜூலை 2024 -துலாம் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இன்றைய ராசி பலனை (ஜூலை 4, 2024 வியாழக் கிழமை) இன்று சந்திரன்...

Rasi Palan new cmp 23 Rasi Palan new cmp 23
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 03 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 03 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசி பலனை (ஜூலை 3, 2024...

4 3 4 3
இலங்கை4 நாட்கள் ago

முகத்திற்கு பயன்படுத்தப்படும் கிரீம் விற்று சொகுசு கார் வாங்கிய நடிகை – இலங்கை CID விசாரணை

முகத்திற்கு பயன்படுத்தப்படும் கிரீம் விற்று சொகுசு கார் வாங்கிய நடிகை – இலங்கை CID விசாரணை நடிகை பியுமி ஹன்சமாலி (Piumi Hansamali), சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து...

3 3
இலங்கை4 நாட்கள் ago

அரசியல் கட்சிக்கான இலவச விமான பயணச்சீட்டு : ரணிலின் அறிவிப்பு

அரசியல் கட்சிக்கான இலவச விமான பயணச்சீட்டு : ரணிலின் அறிவிப்பு சர்வதேச நாணய நிதியத்திடம் மாற்று யோசனை முன்வைக்கும் அரசியல் கட்சிக்கு இலவச விமான பயணச்சீட்டு வழங்கத்...