tamilni Recovered 4 scaled
இலங்கைசெய்திகள்

கனடா மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி

Share

கனடா மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி

பிரித்தானிய மன்னரின் தங்கையான இளவரசி ஆன், குதிரை ஒன்றினால் தாக்கப்பட்டதால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விடயம் குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்கலாம்.

காயமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, இளவரசி ஆன் ஓய்வெடுக்கவேண்டியிருப்பதால், தான் கலந்துகொள்ளவிருந்த சில நிகழ்ச்சிகளை அவர் தவிர்க்கவேண்டியதாயிற்று.

இளவரசி ஆன் கலந்துகொள்ளவேண்டிய நிகழ்ச்சிகளில் ஒன்று, கனடாவில் நடைபெறவிருந்த, தேசிய போர் நினைவு நாள் நிகழ்ச்சியாகும். போரின்போது வட பிரான்சில் உயிரிழந்த கனேடிய வீரர் ஒருவரின் உடலை கனடாவுக்குக் கொண்டுவரும் அந்த நிகழ்ச்சியில் இளவரசி ஆன் கலந்துகொள்ளவேண்டியிருந்தது.

இளவரசி காயமடைந்ததால் கனடா செல்ல முடியாத நிலைமை ஏற்படவே, அவர் சார்பில், அவர் கனடா மக்களுக்கு அனுப்பிய செய்தியை, கவர்னர் ஜெனரல் வாசித்தார்.

அந்த செய்தியில், 2016ஆம் ஆண்டு தான் கனடாவில் தேசிய போர் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை நினவுகூர்ந்துள்ள இளவரசி ஆன், இம்முறை தன்னால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாததற்காக வருத்தம் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

பிரித்தானிய மன்னரான சார்லஸ்தான், கனடா உட்பட 14 நாடுகளின் மன்னர் என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...