tamilni Recovered 4 scaled
இலங்கைசெய்திகள்

கனடா மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி

Share

கனடா மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி

பிரித்தானிய மன்னரின் தங்கையான இளவரசி ஆன், குதிரை ஒன்றினால் தாக்கப்பட்டதால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விடயம் குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்கலாம்.

காயமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, இளவரசி ஆன் ஓய்வெடுக்கவேண்டியிருப்பதால், தான் கலந்துகொள்ளவிருந்த சில நிகழ்ச்சிகளை அவர் தவிர்க்கவேண்டியதாயிற்று.

இளவரசி ஆன் கலந்துகொள்ளவேண்டிய நிகழ்ச்சிகளில் ஒன்று, கனடாவில் நடைபெறவிருந்த, தேசிய போர் நினைவு நாள் நிகழ்ச்சியாகும். போரின்போது வட பிரான்சில் உயிரிழந்த கனேடிய வீரர் ஒருவரின் உடலை கனடாவுக்குக் கொண்டுவரும் அந்த நிகழ்ச்சியில் இளவரசி ஆன் கலந்துகொள்ளவேண்டியிருந்தது.

இளவரசி காயமடைந்ததால் கனடா செல்ல முடியாத நிலைமை ஏற்படவே, அவர் சார்பில், அவர் கனடா மக்களுக்கு அனுப்பிய செய்தியை, கவர்னர் ஜெனரல் வாசித்தார்.

அந்த செய்தியில், 2016ஆம் ஆண்டு தான் கனடாவில் தேசிய போர் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை நினவுகூர்ந்துள்ள இளவரசி ஆன், இம்முறை தன்னால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாததற்காக வருத்தம் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

பிரித்தானிய மன்னரான சார்லஸ்தான், கனடா உட்பட 14 நாடுகளின் மன்னர் என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...