3 1 1 scaled
இலங்கைசெய்திகள்

ஐரோப்பிய நாடுகளுக்கு பயணப்படும் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐக்கிய அமீரகம்

Share

ஐரோப்பிய நாடுகளுக்கு பயணப்படும் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐக்கிய அமீரகம்

பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தங்களது குடிமக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் பயணங்களின் போது ஐக்கிய அமீரக குடிமக்கள் திருட்டு சம்பவங்களில் அதிகமாக சிக்குவதாக எழுந்த புகாரை அடுத்தே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சர் பயணிகளுக்கு விடுத்த கோர்கிக்கையில், ஆஸ்திரியா, பிரான்ஸ், பிரித்தானியா, இத்தாலி, ஸ்பெயின், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணப்படும் அரபு மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும்,

இந்த நாடுகளில் அரபு மக்களை இலக்கு வைத்து அதிக எண்ணிக்கையிலான திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அரபு மக்கள் திருட்டு சம்பவங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள கடைபிடிக்கவேண்டியவையும் அமைச்சர் பட்டியலிட்டுள்ளார்.

அதில், மதிப்புமிக்க அல்லது அரிய பொருட்களை அணிவதை தவிர்க்கவும்; உத்தியோகபூர்வ ஆவணங்களை நீங்கள் வசிக்கும் இடத்தில் பாதுகாப்பாக வைத்திருங்கள்; முறைகேடு மற்றும் மோசடிகளைத் தவிர்க்க, புகழ்பெற்ற உலகளாவிய நிறுவனங்கள் மூலம் கார்கள் மற்றும் ஹொட்டல்களை முன்பதிவு செய்யுங்கள்;

அமைச்சகத்தின் இணையதளம் மற்றும் ஸ்மார்ட் செயலிகளில் அரபு பயணிகளின் பக்கத்தில் தொடர்ந்து புதுப்பிக்கப்படும் ஒவ்வொரு நாட்டிற்குமான குறிப்பிட்ட பயண வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்,

அத்துடன் 0097180024 என்ற ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கான அவசரகால தொடர்பு எண்ணைச் சேமிக்கவும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கோடை காலத்தை முன்னிட்டு பாடசாலைகள் மூடப்படும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெப்பநிலை உயர்ந்து வருவதாலும், அரபு குடும்பங்கள் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலாவுக்கு பயணப்பட தொடங்கியுள்ளனர்.

மேலும் பல்வேறு கண்டங்களுக்கு அடிக்கடி குடும்பமாக பயணப்படும் மக்கள் வாழும் நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...