24 666d310f502ee
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர் உட்பட ஐவருக்கு பொலிஸார் வலை வீச்சு

Share

வெளிநாட்டவர் உட்பட ஐவருக்கு பொலிஸார் வலை வீச்சு

மாதுரு ஓயா தேசிய பூங்காவிற்குள் மயில் ஒன்றை அறுத்து அதன் இறைச்சியை வறுத்து அதனை உட்கொண்ட வெளிநாட்டவர் ஒருவர் உட்பட வேடுவ சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

2019 ஆம் ஆண்டு அல்லது 2020ஆம் ஆண்டில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக் காட்சிகளால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த காணொளியை 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை அடுத்தே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வனவிலங்கு காப்பாளர் – ஹெனானிகல டபிள்யூ.எம்.குமாரசிறி விஜேகோன், மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்திற்கு இது தொடர்பில் முறைப்பாட்டை செய்துள்ளார்.

பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்ட மயிலை வேட்டையாடுவதில் சமூகத்தின் பாரம்பரிய வேட்டைக் கருவிகளான வில் மற்றும் அம்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காணொளியின்படி பழங்குடி சமூகத்தின் பாரம்பரிய முறைப்படி மயிலை வறுத்து, தேனில் குழைத்து உட்கொள்வது காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 683d8e458a9b7
இலங்கைசெய்திகள்

நெருப்புடன் விளையாட வேண்டாம் :அமெரிக்காவிற்கு சீனா கடும் எச்சரிக்கை

தாய்வான்(taiwan) பிரச்சனை சீனாவின்(china) உள்நாட்டு விவகாரமாகும். அதில் அமெரிக்கா(us) தலையிடுவது சரியல்ல. நெருப்புடன் அமெரிக்கா விளையாடக்...

25 683d85e661f0d
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை ஆட்சி அமைப்பு: மொட்டுக் கட்சியின் அதிரடி அறிவிப்பு

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான ஆதரவு தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன அதிரடி அறிவிப்பொன்றை...

images 18
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட முன்னாள் நகரசபைத் தலைவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (02.06.2025) கைது செய்யப்பட்ட தலவாக்கலை (Talawakelle) – லிந்துலை...

25 683d9e89f25aa
இலங்கைசெய்திகள்

பைடன் கொலை செய்யப்பட்டார் – தற்போதிருப்பது யார்..! பகீர் கிளப்பிய ட்ரம்பின் பதிவு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தனது சமூக ஊடக தளமான ட்ரூத்...