24 666cff18de1f8
இலங்கைசெய்திகள்

வீடொன்றினை சுற்றிவளைத்த பொலிஸார் : 5 பெண்கள் கைது

Share

வீடொன்றினை சுற்றிவளைத்த பொலிஸார் : 5 பெண்கள் கைது

ஹபரணை நகருக்கு அண்மித்த பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் தகாத தொழில்முறையில் ஈடுபட்ட 5 பெண்களை பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

ஹபரணை பொலிஸ் விசேட சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சோதனையின் போது, ​​தகாத நடவடிக்கைக்கு ஈடுபட்டிருந்த வீட்டில் தங்கியிருந்த 05 பெண்கள் மற்றும் பல கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று காலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 32-42 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த விடுதியில் சோதனை நடத்தப்பட்ட போது அங்கு சேவை பெற வந்த 32 மற்றும் 42 வயதுடைய 2 ஆண்களை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30-45 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் எனவும், அவர்கள் ஹபரணை, வவுனியா, குருநாகல், கெக்கிராவ மற்றும் கல்நேவ பிரதேசங்களை வசிப்பவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று ஹிகுராக்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...