24 6665ebef8a35a
இலங்கைசெய்திகள்

இலங்கையில் முதன் முதலாக இந்திய தயாரிப்பில் புதிய பெட்ரோல் வகை

Share

இலங்கையில் முதன் முதலாக இந்திய தயாரிப்பில் புதிய பெட்ரோல் வகை

சிலோன் இந்தியன் எண்ணெய் நிறுவனம் (Lanka IOC)எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இலங்கைக்கு புதிய வகை எரிபொருளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

குறித்த எரிபொருள் வகை எக்ஸ்பி 100 ஆக்டேன் பெட்ரோல் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாரஹேன்பிட்டி மற்றும் தும்முல்லை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து புதிய பெட்ரோலின் அறிமுகத்தை ஆரம்பிக்க நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, XP100 என பெயரிடப்பட்ட இந்த வகை பெட்ரோல் இந்தியாவிலேயே உள்நாட்டிலேயே தாயாரிக்கப்படுகின்றது.

அத்துடன், யுனைடெட் பெட்ரோலியம் அவுஸ்திரேலியா நிறுவனம் (United Petroleum Australia) ஜூலை இறுதி அல்லது ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதேவேளை, இந்த அவுஸ்திரேலிய நிறுவனமும் தற்போதுள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளடங்கலாக 50 இக்கும் மேற்பட்ட புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
02 15
செய்திகள்உலகம்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த மேலதிக கப்பல்கள் வருகை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு,...

01 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் மழை மற்றும் பனிமூட்டமான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....