24 66624c613dff8
இலங்கைசெய்திகள்

4 வயது சிறுமி தாக்குதல் விவகாரம்: ரணில் முக்கிய பதிவு

Share

4 வயது சிறுமி தாக்குதல் விவகாரம்: ரணில் முக்கிய பதிவு

அண்மையில் 4 வயது சிறுமி தந்தை ஒருவரினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க கண்டனம் வெளியிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அதிபர் ரணில் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய தந்தைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இவ்வாறான சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறுமியின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமெனவும் அதிபர் வலியுறுத்தியுள்ளதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறுவர்கள் இன்றி நாளைய எதிர்காலம் கிடையாது என்பதனை அனைவரும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்களை தடுக்க சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் சிறுவர்களின் நலன்களை உறுதி செய்வதற்கு அதி உச்ச முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமெனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கல்யாணபுர பிரதேசத்தில் குறித்த சிறுமியை கொடூரமான முறையில் தாக்கிய தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, தாக்குதலுக்கு துணை புரிந்த மேலும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
Screenshot 2025 04 03 155037 e1743676594629
செய்திகள்இலங்கை

கடும் இடிமின்னல் எச்சரிக்கை: இரவு 11 மணி வரை பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல்!

இன்று (நவ 13) இரவு 11.00 மணி வரை கடும் இடிமின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால்...

1660822330330 690785 850x460
இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்காக அல்ல, அதிகாரத்தைக் கைப்பற்றவே: மொட்டுக் கட்சி மற்றும் UNP-ஐ நிராகரித்த வசந்த முதலிகே!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி சிறிலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி...

passport 1200px 10 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

புல்மோட்டை வீதியோரத்தில் கைவிடப்பட்ட ஏழு வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மீட்பு: மர்ம நபர்கள் குறித்து காவல்துறை விசாரணை!

புல்மோட்டை 13வது தூண் பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த, இலங்கையர்களுக்குச் சொந்தமான ஏழு வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை புல்மோட்டை...