இலங்கைசெய்திகள்

சமூக ஊடகங்களில் பரவிய குழந்தை தாக்கப்படும் காணொளி: நபர்களுக்கு நேர்ந்த கதி

Share
24 665fda953f1a3
Share

சமூக ஊடகங்களில் பரவிய குழந்தை தாக்கப்படும் காணொளி: நபர்களுக்கு நேர்ந்த கதி

சமூக ஊடகங்களில் குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்படும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து காவல்துறையினர் விசாரணையை நேற்று (04) ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசி மலை பகுதியில் குறித்த நபரும் மேலும் தாக்குதல் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

45 வயதுடைய ஆண் ஒருவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெலிஓயா கல்யாணபுர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தாக்குதலுக்கு உள்ளான 4 1/2 வயதுடைய குழந்தையும் காவல்துறை காவலில் வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருந்ததுடன் பொதுமக்கள் தமது கடும் விசனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...