24 665cd149f1623
அரசியல்இலங்கைசெய்திகள்

அரகலயவிற்கு பின் மீண்டும் தலை தூக்கும் ரவுடி அரசியல்வாதிகள்

Share

அரகலயவிற்கு பின் மீண்டும் தலை தூக்கும் ரவுடி அரசியல்வாதிகள்

அரகலய போராட்டத்திற்கு பின் பின்வாங்கிய ஊழல் மற்றும் ரவுடி அரசியல்வாதிகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை குருநாகலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி இளைஞர் பேரணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரகலயத்தின் உண்மையான அபிலாஷைகள் நிறைவேற வேண்டுமானால் மக்கள் எழுச்சியை நிலைநாட்ட வேண்டும்.

2022 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சியின் உண்மையான அபிலாஷைகளை நிலை நிறுத்தக்கூடிய ஒரே அரசியல் சக்தியும் அரசாங்கமும் தேசிய மக்கள் சக்தி மட்டுமே.

அரசியல்வாதிகள் அரகலயவில் இருந்து பாடம் கற்கவில்லை மாறாக போதைக்கு அடிமையானவர்களின் எழுச்சி எனக் கூறி மக்களின் எழுச்சியை அவமானப்படுத்துக்கின்றனர்.

மக்கள், குறிப்பாக இளைஞர்கள் எந்தவொரு அரசியல் சக்திகளுடனும் பற்று கொள்ளாமல் பொதுவான அபிலாஷைகளுக்காக வீதியில் இறங்கியதோடு நல்லதொரு அரசியல் நிலைமைக்கான அபிலாஷைகள் அவர்களிடம் உள்ளது.

மோசடி மற்றும் ஊழல் இல்லாத ஒழுக்கமான மற்றும் சட்டபூர்வமான நாட்டை மக்கள் எதிர்பார்த்ததுடன் பொது சமூக நோக்கத்திற்காக வீதியில் இறங்கினர்.

அதை ஆட்சியாளர்கள் உணரவில்லை அத்தோடு அதை அவமானப்படுத்தி போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் விபச்சாரிகள் என தெரிவித்ததோடு இந்த ஆட்சியாளர்கள் கற்கவே இல்லை இவ்வளவு பெரிய எழுச்சியிலிருந்தும் ஒரு பாடம்.

அரசியல் வாதிகள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை அடக்கி ஒடுக்கி அரச சொத்துக்களை விற்கத் தொடங்கியும் அரகலயத்தின் பின்னரும் அதே பழைய பாதையிலேயே பயணிக்கிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...