24 665c38d01c8e7
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் உருவாக்கிய கூட்டமைப்பை அழித்தவர்கள்…! சீற்றம்

Share

விடுதலைப் புலிகளின் தலைவர் உருவாக்கிய கூட்டமைப்பை அழித்தவர்கள்…! சீற்றம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்தவர்கள், தாமே ஓரணியாக வர முடியாத நிலையில், மக்களை ஒன்று படுத்தப்போவதாகக் கூறுவது வேடிக்கையானது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது நடைமுறைச் சாத்தியமில்லாத ஒன்றென தெரிந்தும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் முனகிக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் அத்தனை பேரும் தான் பிரபாகரன் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்தவர்கள். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது கல்லில் நார் உரிக்கும் செயற்பாடு என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் ஒன்றுபட போவதில்லை. பதவிப் போட்டிகளைத் தீர்க்க முடியாத கட்சிகள் மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறுவது ஏமாற்று வேலையாகும்.

ஆக மொத்தத்தில் சஜித், ரணில், அனுர, பகிஷ்கரிப்பு, தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற பஞ்ச நிலை முடிவுகளைத் தான் மக்கள் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள்.

மக்களின் இந்த முடிவுகளுக்கு தமிழ்க் கட்சிகளைத் தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது. பட்டுணர்ந்தும் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட மறுப்பது துரதிஸ்டமானது.

தமிழ் மக்களின் சாபக்கேடானது. அம்பாறை பறிபோய்விட்டது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் திருகோணமலையில் பறிபோய்விடும்.

இப்படியிருக்க அதிபர்த் தேர்தலில் இராமன் வென்றாலும் இராவணன் வென்றாலும் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என சொல்லிக் கொண்டு முட்டாள் தனமான முடிவுகளை எடுக்காமல் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...