24 66594a594cfbe
இலங்கைசெய்திகள்

இலங்கையில் நடந்த இனப்படுகொலை: ஆதாரமாகும் பராக் ஒபாமாவின் கருத்து

Share

இலங்கையில் நடந்த இனப்படுகொலை: ஆதாரமாகும் பராக் ஒபாமாவின் கருத்து

ஈழத்தமிழ் மக்களுக்கான சுயநிர்ணயமே, இலங்கையில் நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு “முக்கிய தீர்வு” என்று அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி விலி நிக்கல்( Wiley Nickel) தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அமெரிக்க காங்கிரஸில் ஒரு வரலாற்று தீர்மானத்தை முன்வைத்த பின்னர் ஊடகம் ஒன்றுடன் இடம்பெற்ற நேர்காணலின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அமெரிக்க நடவடிக்கையை முன்னெடுப்பதில் இந்தத் தீர்மானம் முக்கியமான முதல் படி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிலைமை, தமிழ் சமூகத்தின் துன்புறுத்தல் மற்றும் சுயநிர்ணயத்தின் அவசியத்தைப் பற்றிய தமது குரலை அமெரிக்காவில் ஒலிக்கச் செய்வதற்கான மிக முக்கியமான முதல் படியாகவும் இந்த தீர்மானம் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

அமெரிக்காவின் இரண்டு பிரதான கட்சிகளைச் சேர்ந்த மற்ற ஏழு காங்கிரஸ் உறுப்பினர்களால் அனுசரணை செய்யப்பட்ட இந்தத் தீர்மானம், ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் அவர்களின் சுதந்திரத்திற்கான கோரிக்கையை ஆதரிப்பதன் மூலம் தமிழ் இனப்படுகொலை உட்பட கடந்தகால வன்முறைகள் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது.

இதற்காக தமிழர்கள் மத்தியில் சுதந்திரமான வாக்கெடுப்பையும் அது கோருகிறது. இந்த விடயம் தொடர்பாக தாம், கனடாவின் இரண்டு கட்சி குழுவுடன் சந்திப்பை நடத்தியதாக குறிப்பிட்ட நிக்கல், அவர்களின் முழு ஆதரவும் தமக்கு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் இனப்படுகொலையை அங்கீகரிப்பதும் ஒரு முக்கிய படியாகும் என்று நிக்கல் கூறியுள்ளார். இதற்கான தரவுகள், ஆதாரங்கள் தெளிவாக உள்ளன, முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தனது சுயசரிதையில் இலங்கையில் நடக்கும் வெளிப்படையான இனப்படுகொலையில் ஐக்கிய நாடுகளின் ஆதரவு இல்லாததை குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு முக்கியமான முதல் பகுதி என்று தாம் நினைப்பதாக நிக்கல் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கான சுதந்திர வாக்கெடுப்பு பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்த நிக்கல் அந்த வாக்கெடுப்பு இலங்கையில் நடக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...