24 6657f1ef8bc96
இலங்கைசெய்திகள்

சிறுவர்கள் மத்தியில் புகைப்பழக்கம் அதிகரிப்பு

Share

சிறுவர்கள் மத்தியில் புகைப்பழக்கம் அதிகரிப்பு

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் புகைப்பழக்கம் அதிகரித்துள்ளதாக சிறுவர் நோய் வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுஸ்டிக்கப்படுவதனை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

13 முதல் 15 வயது வரையிலான பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைப் பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தரம் 9, 10 மற்றும் 11ல் கற்கும் மாணவர்களில் 5.7 வீதமானவர்கள் ஒரு தடவையேனும் புகைபிடித்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவர்களில் 3.7 வீதமானவர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். பாடசாலை மாணவர்கள் கூடுதலாக ஈ சிகரட் வகைகளை புகைக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிள்ளைகளின் புகைப்பழக்கம் தொடர்பில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

புகைப்பழக்கத்தினால் சுவாச மற்றும் புற்று நோய்கள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
IMG 7681
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொத்மலையில் மாபெரும் சிரமதானப் பணி: 20 கிராமங்களுக்கான போக்குவரத்துப் பாதையைச் சீரமைக்க 2,000 பேர் திரண்டனர்!

டித்வா (Ditwah) புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கொத்மலை, பனங்கம்மன பகுதி மற்றும் மகா பீல்ல கால்வாய்...

MediaFile 2 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அதிவேக வீதியில் அதிரடிச் சோதனை: கடவத்தை நுழைவாயிலில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி மற்றும் கடவத்தை வெளியேறும் நுழைவாயில் பகுதிகளில் இன்று (18)...

image b16dc0e689
செய்திகள்இலங்கை

மின்சார சபை மறுசீரமைப்பு: 2,200 ஊழியர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் – வாழ்க்கைத் தரம் கேள்விக்குறி என முறையீடு!

இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விருப்ப ஓய்வுக்காக (VRS) விண்ணப்பித்துள்ள...

arast 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

1 கோடி ரூபா மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் கைது!

இணையத்தளம் வாயிலாகத் தளபாடங்கள் (Furniture) வழங்குவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை...