24 6650da2ea612f
இலங்கைசெய்திகள்

எல்.பி.எல் மோசடிகளுக்கும் இலங்கை கிரிக்கெட் சபைக்கும் தொடர்பில்லை

Share

எல்.பி.எல் மோசடிகளுக்கும் இலங்கை கிரிக்கெட் சபைக்கும் தொடர்பில்லை

லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் மோசடிகளில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹேவா விதானகே இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர், லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரின் பணிப்பாளர் மற்றும் ஏனைய கிரிக்கட் நிர்வாக அதிகாரிகள் மோசடிகளில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதிகாரிகள் ஆட்ட நிர்ண சதிகளுடன் தொடர்புபட்டிருப்பதாகவும், மோசடிகளுடன் தொடர்பு பட்டிருப்பதாகவும் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையில் இலங்கை கிரிக்கெட் சபை மிகவும் நேர்மையான முறையில் போட்டித் தொடரை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் விளையாட்டின் நேர்மைத்தன்மையை உறுதி செய்வதற்கு எடுத்து வரும் முயற்சிகளின் காரணமாகவே மோசடிகள் குறித்த விசாரணைகள் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

தம்புள்ள அணி தொடர்பான எழுந்த சர்ச்சைகளின் போதும் இலங்கை கிரிக்கெட் சபை விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளாக சுட்டிக்காட்டியுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டின் நேர்மைத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
1765079066 25 693273715360b md
இலங்கைசெய்திகள்

கண்டி – கொழும்பு ரயில் பயணிகளுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்!

கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக, நாளை (டிசம்பர் 8) காலை...

image 49051e3a6e 1
இலங்கைசெய்திகள்

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: “மகிழ்ச்சியாகத் தூங்கப் போனோம், மண்ணுக்குள் புதைந்தோம்” – தப்பியோர் அதிர்ச்சிப் பேட்டி!

மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த...

images 19
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 627 ஆக உயர்வு: கண்டி மாவட்டத்தில் அதிக பாதிப்பு! 

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627...

image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம்...