24 664ed157caf0c
இலங்கைசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளின் மின் விநியோகம் பாதிப்பு

Share

நாட்டின் பல பகுதிகளின் மின் விநியோகம் பாதிப்பு

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக அதிகளவான பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 3 நாட்களில் 36,900 மின் கம்ப சேதங்கள் பதிவாகியுள்ளன.

இதன் காரணமாக 300,000இற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின் விநியோகம் வழங்குவது தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பாதிப்புக்களை சீராக்குவதற்காக ஊழியர்கள், 24 மணிநேரமும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மின்சாரம் தடைபட்ட இடங்களுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களில் மின்சாரம் விநியோகிக்கப்படவுள்ளது.

அதேவேளை, மின்சார பாவனையாளர்கள், தங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொள்ளலாம்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...