24 664c232fc2ddf
இலங்கைசெய்திகள்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு : நம்பிக்கை வெளியிட்டுள்ள பிரான்ஸ்

Share

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையானது மிக விரைவில் முடிவுக்கு வரும் என இலங்கைக்கான பிரான்ஸ் (France) தூதுவர் ஜீன் பிரான்சுவா பேக்டெட் (Jean François Pactet) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அதிகாரிகளுடன் கொழும்பில் இடம்பெற்ற வட்டமேசை கலந்துரையாடல் ஒன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரான்ஸுடன் இந்தியா (India) மற்றும் ஜப்பான் (Japan) ஆகிய நாடுகள் இணைந்து, அதிகாரப்பூர்வ கடன் குழு ஒன்றினை (OCC) அமைத்துள்ளன.

ஆனால், சீனா (China) அந்த குழுவில் உள்ளபோதும், வெறும் பார்வையாளராகவே செயற்படுகிறது.

இந்தநிலையிலேயே, இருதரப்பு கடன் வழங்குநராகவும் கடன் மறுசீரமைப்பு தொடர்பாகவும் இலங்கையுடன் தனியான செயற்றிட்டங்களை கையாள்கிறது.

எனவே, செலுத்த வேண்டிய கடன்களின் அளவைக் குறைத்தல், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணம் செலுத்துவதை ஒத்திவைத்தல் மற்றும் வட்டி குறைப்பு தொடர்பில் பாரிஸ் கிளப்பின் செயலாளர் என்ற முறையில் இந்நேரத்தில் அத்தகைய தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியாது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...