24 664b65c06727c
இலங்கைசெய்திகள்

இலங்கையை மெய்நிகர் மாகாணமாக மாற்றும் வாய்ப்பை பெற்றுள்ள இந்தியா

Share

இலங்கையை மெய்நிகர் மாகாணமாக மாற்றும் வாய்ப்பை பெற்றுள்ள இந்தியா

2022ஆம் ஆண்டு இலங்கை திவாலானதன் பின்னர் சீனாவைக் காட்டிலும் இந்தியா இலங்கையில் அதிக செல்வாக்கை செலுத்தி வருகிறது.

இந்தநிலையில் இலங்கையை மெய்நிகர் மாகாணமாக மாற்றுவதற்கு இந்தியா பெறும் மிகப்பெரிய வாய்ப்பு இதுவாகும் என்று இலங்கையின் வெளியுறவுக் கொள்கை சிந்தனைக் குழுவான International-relations analyst of Factum இன் தலைமை சர்வதேச உறவுகள் ஆய்வாளர் உதித தேவப்ரியா குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலான முக்கிய கருத்தொன்றை சீன செய்தித்தாளொன்று செய்தியாக்கியுள்ளது.

இந்தியா, ஏற்கனவே கொழும்பு துறைமுக முனையத்தின் அபிவிருத்தியை அதானி நிறுவனத்தின் ஊடாக மேற்கொண்டு வருவதோடு மன்னாரிலும், பூநகரியிலும் காற்றாலை மின்சாரத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

அத்துடன் சீனாவினால் அமைக்கப்பட்ட மத்தள விமான நிலையத்தின் நிர்வாகத்தை ரஷ்யாவுடன் இணைந்து அண்மையில் பொறுப்பேற்றது.

இலங்கையில் இந்திய நிறுவனங்களின் வருகைக்கு மேலதிகமாக, 2022 ஆம் ஆண்டில் புதுடெல்லி கொழும்புக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அவசரகால நிதியுதவியாக வழங்கியது.

இந்த நகர்வுகள் அண்டை நாடுகளில் பொருளாதாரம் மற்றும் வணிக நிறுவனத்தை அதிகரிப்பதற்கான இந்தியாவின் மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அண்மைய ஆண்டுகளில், துறைமுக மேலாண்மை முதல் எண்ணெய் மற்றும் எரிவாயு வரையிலான துறைகளில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம் சீனா, இலங்கையுடனான தனது பொருளாதார பங்காளித்துவத்தை ஆழப்படுத்தியுள்ளது.

சீனாவால் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு சீன அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனத்திற்கு வழங்குவதாக 2017 இல் இலங்கை அறிவித்தது.

நவம்பரில் சீன எண்ணெய் நிறுவனமான சினோபெக்கால் ஹம்பாந்தோட்டையை ஒட்டிய 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்த கொழும்பு ஒப்புதல் அளித்தது.

இந்தநிலையில் கொழும்பை தளமாகக் கொண்ட சட்டத்தரணியும் வெளிநாட்டுக் கொள்கை ஆய்வாளருமான சரண கனங்கேகமகே, இந்திய நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பல ஒப்பந்தங்கள் இருந்தபோதிலும், இலங்கை சீனாவுடனான தனது உறவை “மதிப்பிழப்பு” செய்யவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் இலங்கை தமது பொருளாதாரக் கொள்கையின் முக்கியத் திட்டமாக, சீனா மற்றும் இந்தியாவை நம்பி, தமது பயன்படுத்தப்படாத அல்லது செயல்படாத சொத்துக்களை நிர்வகிப்பதன் மூலம் அதிகபட்ச பலன்களைப் பெறுவதை நோக்காகக் கொண்டுள்ளது என்றும் வெளிநாட்டுக் கொள்கை ஆய்வாளருமான சரண கனங்கேகமகே தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....