24 664541cdc2f61
இலங்கைசெய்திகள்

சுவ செரிய அவசர சேவைக்கு உந்துதல் தேவை

Share

சுவ செரிய அவசர சேவைக்கு உந்துதல் தேவை

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும், இந்தியாவின்(India) திட்டமான, அவசர நோயாளர் காவு வண்டி வலையமைப்பின் மூலம் இதுவரை தொலைதூரப் பகுதிகள் உட்பட சுமார் 82 இலட்சம் அழைப்புகள் மற்றும் 19 இலட்சம் மருத்துவ அவசரநிலைகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இந்த நோயாளர் காவு வண்டி சேவையில் இயங்கும் 322 வாகனங்களில், 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஊழியர்கள் வெற்றிடங்கள் அல்லது பழுதுபார்ப்பதில் தாமதம் காரணமாக தற்போது இயங்காமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில், இந்தியா வழங்கிய இலவச நோயாளர் காவு வண்டி சேவை, எட்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் அத்தியாவசியமான மருத்துவமனைகளுக்கு முன்னதான அவசர சிகிச்சைகளை வழங்கி வருகிறது.

இந்தநிலையில் ஒரு பொது சுகாதார நிபுணரின், அண்மைய சமூக ஊடக இடுகையின் மூலம் இந்த வலையமைப்புக்கு முக்கியமான உந்துதல் ஆதரவு தேவைப்படுவது தெரியவந்துள்ளது.

கொழும்பில் உள்ள அரசாங்க வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியரான யசுனி மாணிக்ககே, நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் 51 வயதுடைய நபரின் திடீர் மரணம் தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

“தாம் 1990 என்ற அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு அழைப்பு விடுத்தபோதும், வாகனங்கள் எதுவும் அருகில் இல்லை

எனவே தமது இல்லத்தில் உள்ளவரை காப்பாற்ற முடியவில்லை.

இந்தநிலையில் சுவசேரியா 1990 சேவைக்கு நிதியளிப்பதற்கும் உயிர்களைக் காப்பாற்றுவதும் ஏன் இலங்கை அரசாங்கம் முன்னுரிமை வழங்கவில்லை” என்று யசுனி மாணிக்ககே பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...