24 664181d705560
இலங்கைசெய்திகள்

குளியாப்பிட்டி இளைஞர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் காதலி கைது

Share

குளியாப்பிட்டி இளைஞர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் காதலி கைது

குளியாப்பிட்டி இளைஞர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரின் அவருடைய காதலியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வஸ்ஸாவுல்ல இலுக்ஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

படுகொலைக்கு உதவியமை, குற்றச் செயலை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குளியாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் திகதி காதலியை பார்க்கச் சென்றிருந்த வேளையில் காணாமல் போயிருந்தார்.

குறித்த இளைஞரின் சடலம் சிலாபம் மாதம்பை பகுதியில் வைத்து மீட்கப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குறித்த யுவதியின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் ஏற்கனவே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...