24 663d70fde865a
இலங்கைசெய்திகள்

கொழும்பில் இயங்கிய போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சுற்றிவளைப்பு

Share

கொழும்பில் இயங்கிய போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சுற்றிவளைப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி ராஜகிரிய பிரதேசத்தில் இயங்கிவந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்று (5/8) இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போலந்தில் தொழில் வழங்குவதாக பணம் பெற்றுக்கொண்ட இந்நிறுவனம் ராஜகிரிய பிரதேசத்தில் வீசா ஆலோசனை மையம் என்ற போர்வையில் இந்த நிறுவனம் இயங்கி வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

போலந்தில் தொழில் வழங்குவதற்காக நிறுவனத்திற்கு ஒரு இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் உறுதியளித்தபடி தொழில் வழங்கப்படவில்லை எனவும் ஒருவர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி, சோதனை நடத்தப்பட்டு, நிறுவனத்தின் உரிமையாளரை விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மேலும், சம்பந்தப்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 2 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனவும், அவர் நேற்று (5/9) கொழும்பு, அளுத்கடை நீதவான் நீதிமன்ற இலக்கம் 5 இல் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...