24 663c15b3c4426
இலங்கைசெய்திகள்

நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்! ஜனாதிபதி அறிவிப்பு

Share

நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்! ஜனாதிபதி அறிவிப்பு

தற்போது நாட்டில் அனைவரும் வெப்பமான காலநிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான புதிய சட்டத்தை அரசாங்கம் உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) அறிவித்துள்ளார்.

நமது தேசத்திற்கும் கிரகத்திற்கும் காலநிலை நடவடிக்கை என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது ” சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான புதிய சட்டத்தையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் இரண்டையும் கையாளும் ஒரு சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.

இது மத்திய சுற்றாடல் அதிகார சபையை தொடர்ந்து இயக்கும் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மையத்தையும் உள்ளடக்கும். இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.

நமது சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்திற்கான கிடைக்கும் திறன் ஆகியவற்றை பார்த்தால், நமக்கு 30 முதல் 50 ஜிகாவாட் வரையிலான ஆற்றல் உள்ளது.

எங்களிடம் உள்ள இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை நாங்கள் அதிகம் பயன்படுத்த விரும்புகிறோம்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே ஜனாதிபதியான எனது பணியாக இருந்தது. இதுவரை இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டின் தற்போதைய பொருளாதார அமைப்பில் நாம் தொடர்ந்து முன்னேற முடியாது. நான் முன்பு பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டது போல், நாம் அதிக போட்டித்தன்மை கொண்ட ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற வேண்டும். அதற்கான புதிய சட்டத்தையும் உருவாக்கி இருக்கிறோம்.

பொருளாதார மாற்று சட்டம் அடுத்த வாரம் வர்த்தமானியில் வெளியிடவுள்ளோம்.

நாங்கள் எங்களின் கடனை வெற்றிகரமாக மறுசீரமைத்துள்ளோம். மிகவும் சிரமப்பட்டு அந்த வேலையை செய்தோம். அந்த சவாலை எதிர்கொள்ளும் திறன் இலங்கைக்கு இருந்தது.

ஆனால் அதற்கு ஆதரவு தேவைப்படுபவர்களும் இருக்கிறார்கள். மேலும் கடன் மறுசீரமைப்புக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனைவரும் உதவ வேண்டும்.

கடன் நெருக்கடியில் இருந்து மீள ஆப்பிரிக்க நாடுகளுக்கு நிதி தேவைப்படுகிறது. இல்லையேல் அந்த கண்டத்தில் அழிவு ஏற்படும்.” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...