24 663c3d3754aa3
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்

Share

இலங்கைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்

“குஷ்” என்ற கஞ்சா போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி ஐந்து மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய நடனக் கலைஞரான சந்தேகநபர் தனது சூட்கேஸில் மறைத்து வைத்து இந்த கஞ்சாவை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார்.

சந்தேகநபர் தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து எயார் ஏசியா விமானம் FD-140 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

05 கிலோ 278 கிராம் எடையுடைய இந்த “குஷ்” கஞ்சா தனித்தனியாக 36 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...