24 663bf9814d8c9
இலங்கைசெய்திகள்

ஹிருணிக்காவுக்கு எதிரான வழக்கு விசாரணை விரைவில்

Share

ஹிருணிக்காவுக்கு எதிரான வழக்கு விசாரணை விரைவில்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு (Hirunika Premachandra)எதிரான வழக்கொன்றை விசாரிப்பது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் 2 வார கால அவகாசம் வழங்கியுள்ளது.

ஊவா மாகாண ஆளுநர் மொஹமட் முஸம்மிலின் மகன் தாக்கல் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.

குறித்த நபர் பெண்ணொருவரைத் தாக்கிவிட்டுத் தலைமைறைவாகி இருந்த நிலையில் , அது தொடர்பில் ஹிருணி்க்கா தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக இந்த வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹிருணிக்காவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சட்டத்தரணிகளுக்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...