இலங்கைசெய்திகள்

ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ள மத்திய வங்கி: குற்றச்சாட்டு

Share
24 6639914dcf540
Share

ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ள மத்திய வங்கி: குற்றச்சாட்டு

இலங்கை மத்திய வங்கியானது, தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாக பில்லியன் கணக்கான ரூபாய் நட்டத்தை பதிவு செய்திருந்த போதிலும், அதன் வரலாற்றில் மிகப்பெரிய வித்தியாசத்தில் தனது ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “2023 இல் இலங்கை மத்திய வங்கியின்(Central Bank of Sri Lanka) நிகர இழப்பு 114 பில்லியன் ரூபாய்கள் ,2022ல் நிகர இழப்பு 374 பில்லியன் ரூபாய்கள் ஆகும்.

இந்தநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தொடர்ச்சியாக நட்டத்தை சந்திக்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தின் சலுகைகள், ஊக்குவிப்பு மற்றும் சம்பள உயர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்படும் என்பதே வழமையான செயற்பாடாக இருக்கும்.

எவ்வாறாயினும், மத்திய வங்கி தனது ஊழியர்களுக்கு அதிகூடிய சம்பள உயர்வை வழங்கி வருகின்றது.

எனவே, நாட்டை ஏமாற்றியதற்காக மத்திய வங்கியின் ஆளுநரும் அதன் நிர்வாக சபையும் உடனடியாக பதவி விலக வேண்டும்.

அரசாங்கம் மற்றும் வங்கிகளுக்கு கடன் வழங்கி வட்டியை வசூலிப்பதன் மூலம் மத்திய வங்கி இலாபம் ஈட்டக்கூடிய ஒரு வழிமுறை உள்ளது.

பணத்தை அச்சிடுவதற்கு மத்திய வங்கிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதால் இது சாத்தியமாகிறது” என்று உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...