24 6635f99a8d114
இலங்கைசெய்திகள்

கொழும்பு உட்பட பல பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

Share

கொழும்பு உட்பட பல பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் உள்ள கடற்பரப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த கடற்பரப்புக்களில் இன்றையதினம் கடல் அலை மேலெழக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கற்பிட்டியில் இருந்து கொழும்பு(Colombo), காலி(Galle) மற்றும் ஹம்பாந்தோட்டை(Hambandota) ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புக்களில் இவ்வாறு கடல் அலை மேலெழக் கூடும் என்றும் இதன் காரணமாக அவதானமாக செயற்படுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த கடற்பரப்பில் 2.5 மீற்றர் முதல் 3 மீற்றர் வரையான உயரத்திற்கு கடல் அலை மேலெழக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களத்தில் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வார இறுதி நாட்கள் என்பதால் பெரும்பாலான மக்கள் கடற்கரைகளில் உலாவுவதற்கு செல்கின்றனர்.

மேலும், நிலவும் கடும் வெப்பமான கால நிலை காரணமாகவும் கடற்கரைக்குச் செல்வதும், நீராடுவதற்காகவும் செல்லும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

அத்துடன் பாடசாலை விடுமுறை காலம் என்பதனாலும், சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு நீராடச் செல்லும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடல் அலை மேலெழும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் முதல் பெரியவர்கள் வரை கடற்கரைக்குச் செல்லும் போது அவதானமாக செயற்படுவதுடன் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தலைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...