24 66342ee869083
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலை குறைக்கப்பட்டும் பொருட்கள் விலைகள் குறையவில்லை

Share

எரிபொருள் விலை குறைக்கப்பட்டும் பொருட்கள் விலைகள் குறையவில்லை

எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டாலும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலைகள் குறையவில்லை என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணம் என்பன குறைக்கப்பட்ட போதிலும் அதன் ஏனைய பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தெளிவுபடுத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள், மின்சாரக் கட்டணம் மற்றும் எரிவாயு என்பனவற்றின் விலைகள் சிறிய தொகையில் அதிகரித்தாலும் ஏனைய பொருட்களின் விலைகள் உயர்த்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் விலை குறைக்கப்படும் போது மக்களுக்கு அந்த நிவாரணங்கள் கிடைக்கப் பெறுவதில்லை என சபாநாயகா மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவூட்ட திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....