24 66340b478b590
இலங்கைசெய்திகள்

தென்னையால் இலங்கைக்கு பாரிய வருமானம்

Share

தென்னையால் இலங்கைக்கு பாரிய வருமானம்

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தகவலின்படி, 2024 மார்ச் மாதத்தில் தென்னை தொடர்பான பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 19131 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

தென்னை தொடர்பான பொருட்கள் மற்றும் ஏற்றுமதியின் வருமானம் தொடர்பில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள மாதாந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தென்னை தொடர்பான உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்பான அறிக்கை விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் (Mahinda Amaraweera) தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெர்னாண்டோவினால் (Roshan Fernando) கையளிக்கப்பட்டது.

அதன்படி, 2024 மார்ச் மாதத்தில் தோட்டக்கலைக்காக இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தென்னை நார் 38,065 மெட்ரிக் தொன் ஆகும். கிடைத்த வருமானம் 5725 மில்லியன் ரூபா. 2023 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்தத் தொகை 29 சதவீத வளர்ச்சியாகும்.

தேங்காய் மட்டைகளிலிருந்து 5,707 மெட்ரிக் தொன் செயற்படுத்தப்பட்ட காபன் ஏற்றுமதி மார்ச் 2024 இல் ரூ.4,430 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 3122 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேங்காய்ப்பாலின் அளவு 7,059 மெட்ரிக் தொன். தேங்காய் ஏற்றுமதி மூலம் மார்ச் மாதத்தில் 2,378 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

அந்த மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட உலர் தேங்காயின் அளவு 3592 மெட்ரிக் தொன் ஆகும்.

பவுடர் ஆக்கப்பட்ட தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 1,587 மில்லியன் ரூபாவும், தேங்காய் கிரீம் ஏற்றுமதி மூலம் 1,390 மில்லியன் ரூபாவும், தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி மூலம் 539 மில்லியன் ரூபாவும் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....