24 663000b71a560
இலங்கைசெய்திகள்

ரஷ்யாவில் பணியாற்றும் இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் குறித்து விசாரணை

Share

ரஷ்யாவில் பணியாற்றும் இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் குறித்து விசாரணை

ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் முனைகளில் பணியாற்றும் முன்னாள் இராணுவத்தினர் தொடர்பாக தொடர்ச்சியாக விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.

தற்போதைய நிலையில் உக்ரைன் போர் முனையில் 60 பேரளவான முன்னாள் இராணுவத்தினரும், ரஷ்யப் போர் முனையில் 100 பேர் அளவிலான முன்னாள் இராணுவத்தினரும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

உக்ரைன் போர் முனையில் பணியாற்றும் இலங்கை இராணுவ சிப்பாய்களில் 15 பேர் உரிய முறையில் விடுப்பு அல்லது விலகல் கடிதத்தை சமர்ப்பிக்காது இராணுவத்தில் இருந்து தப்பியோடியே தற்போது அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இராணுவத்தின் பொதுமன்னிப்பின் கீழ் தற்போது அவர்கள் சட்டரீதியாக இராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ​போர்முனைகளில் பணியாற்றும் இராணுவத்தினர் குறித்த விபரங்கள், அவர்களின் தொடர்பு விபரங்கள், தற்போதைய நிலைமை என்பன தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தொடர்ந்தும் விபரங்களை சேகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...