24 662610f5e52c0
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்!! சர்வதேசத்தை நாடவுள்ள கத்தோலிக்க திருச்சபை

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்!! சர்வதேசத்தை நாடவுள்ள கத்தோலிக்க திருச்சபை\

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் (Easter Attack) தொடர்பாக சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க பல வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஊடாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) பிரேரணையை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

தாக்குதல்களின் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Cardinal Malcolm Ranjith) நேற்று (21.04.2024) தென்னிலங்கை ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “கடந்த மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சதி அல்லது அதற்கு மூளையாக செயல்பட்டவர்களை வெளிப்படுத்தத் தவறிவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தருவதாக வாய்மொழியாக வழங்கிய வாக்குறுதியை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksha) நிறைவேற்றத் தவறிய சூழலில், தற்போது அவர் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆகியவற்றின் எழுத்துப்பூர்வ உறுதிமொழிகள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்.

எனினும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவே (Ranil Wickremesinghe) தற்போது நாட்டின் ஜனாதிபதியாகவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக வெறும் தூதுவராகவே செயற்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விவரிக்கப்பட்ட கொழும்பு வடக்கின் அன்றைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் தனது கடமைகளை நிறைவேற்றாமல் இருந்த தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon)இன்று பொலிஸ் மா அதிபராக (IGP) உள்ளார்.

மேலும், இந்திய புலனாய்வுப் பிரிவினர் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தும், படுகொலைகளைத் தடுக்கத் தவறிய அப்போதைய அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பணிப்பாளர் நிலாந்த ஜெயவர்தன இன்று பொலிஸ் துறையின் இரண்டாம் நிலைப் பணிப்பாளராக உள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் நீதியை எதிர்பார்க்க முடியுமா என கருதினால் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...