24 6625261118bd5
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் : பயங்கரவாதம் குறித்து இந்தியா கண்டனம்

Share

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் : பயங்கரவாதம் குறித்து இந்தியா கண்டனம்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில்(Easter attack sri lanka), உயிரிழந்த அனைத்து உயிர்களையும் இலங்கை நினைவுகூரும் நிலையில், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் கண்டிப்பதாக இந்தியா(India) கூறியுள்ளது.

குறித்த விடயத்தினை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் (High Commission of India) தனது உத்தியோகபூர்வ எக்ஸ்(X) தளத்தில் பதிவிட்டுள்ளது.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுடனும் இலங்கை மக்களுடனும் இந்தியா ஒத்துழைப்புடன் நிற்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா(Santhosh Jha), 2019 ஆம் ஆண்டில் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற தளங்களில் ஒன்றான புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று (21.04. 2024) நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு இலங்கை மக்களுக்கு, ஒத்துழைப்பை வெளிப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு குறுகிய பயணமாக கொழும்புக்கு பயணித்தார்.

தனது பயணத்தின் போது, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, நாட்டின் தலைநகரில் உள்ள நாட்டின் முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...