24 6623381d5e2fc
இலங்கைசெய்திகள்

நியூசிலாந்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு

Share

நியூசிலாந்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு

நியூசிலாந்தின் வெலிங்டனில் (New Zealand Wellington) இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை திறப்பதற்கான அமைச்சரவையின் தீர்மானத்தை அடுத்து, அமைச்சின் வெளிநாட்டு சொத்துக்கள் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரதீபா சாரம் (Pradeepa Saram) தலைமையிலான உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழு நியூசிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ளது.

குறித்த விஜயமானது ஏப்ரல் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்த விஜயத்தின் போது, ​​தூதுக்குழுவினர் நியூசிலாந்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் உட்பட பிற நிறுவனங்களுடன் தொடர்புடைய பங்குதாரர்களுடன் சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர்.

நியூசிலாந்தில் கணிசமான அளவில் தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களைக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க இலங்கை வெளிநாட்டவர் சமூகம் உள்ளமையால் உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவுவதற்கும் வர்த்தகம், கல்வி, விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வலுவான ஒத்துழைப்பைப் பின்தொடர்வதற்கும் இது சாதகமாக அமையவுள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்து 2021இல் இலங்கையில் ஒரு உயர்ஸ்தானிகராலயத்தை திறந்துள்ளதுடன் இது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் காணப்படுகின்றது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...