24 6620b3e235cb1
இலங்கைசெய்திகள்

மீண்டும் சிங்கள அரசை குறிவைக்குமா கனடா…! எச்சரிக்கையுடன் இலங்கை

Share

மீண்டும் சிங்கள அரசை குறிவைக்குமா கனடா…! எச்சரிக்கையுடன் இலங்கை

இலங்கையின் போர் வெற்றியை நினைவு கூறும் சமயத்தில் கனடா தலைவர்கள் கொண்டுவரும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இலங்கையின் இராஜதந்திர வட்டாரம் தெரிவித்துள்ளது.

அடுத்தமாதம் இலங்கையில் போர் வெற்றியை நினைவுகூறுதல் தொடர்பான கலந்துரையாடல்களின் போதே இந்த விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2023), கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கை மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை முன்வைத்தார், இது இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர மோதலைத் தூண்டியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை கனேடியத் தூதுவரை வரவழைத்தது.

இந்த விடயத்தில் இதற்கு முன்னர் இலங்கை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இம்முறையும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் மீண்டும் இடம்பெறுமா என்பதை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக இராஜதந்திர வட்டாரம் தெரிவித்துள்ளது.

போரின் போது இலங்கையில் நடந்த சம்பவங்கள் இனப்படுகொலைக்கு சமமானவை அல்ல என்று கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் முடிவு செய்திருந்தாலும், கனேடிய தலைவர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை என்றும் அவர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...