24 66205e846f602
இலங்கைசெய்திகள்

அம்பாந்தோட்டையில் 12 வயது சிறுவன் வெட்டிக்கொலை

Share

அம்பாந்தோட்டையில் 12 வயது சிறுவன் வெட்டிக்கொலை

அம்பாந்தோட்டை (Hambantota) – பெலியத்தை பிரதேசத்தில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் தந்தையை கூரிய ஆயுத்தினால் தாக்கி காயப்படுத்திய கும்பல், மகனை வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று (17.04.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது 12 வயதுடைய சிறுவனே மேற்படி சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 38 வயதுடைய தந்தை படுகாயம் அடைந்த நிலையில் பெலியத்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காணித் தகராறு காரணமாக இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பிரதேசத்தில் இருந்து தப்பியோடியுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...