24 661eba984903a
இலங்கைசெய்திகள்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் தடங்கல்

Share

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் தடங்கல்

தனியார் பத்திரப்பதிவுதாரர்களுடனான இலங்கையின் கடன் மறுசீரமைப்பு(Debt restructuring) பேச்சுவார்த்தையில் இரண்டு விடயங்களில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் தலைமைப் பணிப்பாளர் சாகல ரத்நாயக்க(Sagala Ratnayake) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “ஆலோசகர்களின் அறிவுறுத்தலின் பேரில் இரண்டு தரப்பினரும் இந்த ஆண்டு இரண்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

இதன்போது கருத்து வேறுபாடுகள் உள்ள நான்கு பகுதிகள் அடையாளம் காணப்பட்டன.

பின்னர் பேச்சுவார்த்தைகளின் விளைவாக அவை இரண்டாகக் குறைக்கப்பட்டது. எனினும் அந்த விடயங்கள் எதுவென்பதை வெளிப்படுத்த முடியாது.

இதேவேளை இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பில், சீனாவுடனும்(China) இலங்கை ஒரு வெற்றிகரமான பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக அந்த கடன்கொடுத்தோருடன் உடன்படிக்கைகள் செய்துக்கொள்ளப்படவுள்ளன” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....