24 661eba984903a
இலங்கைசெய்திகள்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் தடங்கல்

Share

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் தடங்கல்

தனியார் பத்திரப்பதிவுதாரர்களுடனான இலங்கையின் கடன் மறுசீரமைப்பு(Debt restructuring) பேச்சுவார்த்தையில் இரண்டு விடயங்களில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் தலைமைப் பணிப்பாளர் சாகல ரத்நாயக்க(Sagala Ratnayake) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “ஆலோசகர்களின் அறிவுறுத்தலின் பேரில் இரண்டு தரப்பினரும் இந்த ஆண்டு இரண்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

இதன்போது கருத்து வேறுபாடுகள் உள்ள நான்கு பகுதிகள் அடையாளம் காணப்பட்டன.

பின்னர் பேச்சுவார்த்தைகளின் விளைவாக அவை இரண்டாகக் குறைக்கப்பட்டது. எனினும் அந்த விடயங்கள் எதுவென்பதை வெளிப்படுத்த முடியாது.

இதேவேளை இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பில், சீனாவுடனும்(China) இலங்கை ஒரு வெற்றிகரமான பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக அந்த கடன்கொடுத்தோருடன் உடன்படிக்கைகள் செய்துக்கொள்ளப்படவுள்ளன” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
26 695b58a150149
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கத்தின் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன: தற்போதைய ஆட்சி குறித்து மகிந்த ராஜபக்ச சாடல்!

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பல விடயங்களில் முயற்சி செய்தாலும், அவை அனைத்தும் தோல்வியிலேயே...

26 695b5ca406bfd
செய்திகள்இலங்கை

விவசாய அமைச்சுக் கட்டிட விவகாரம்: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ரிஷாட் பதியுதீன் முன்னிலை!

ராஜகிரியவில் விவசாய அமைச்சிற்காகக் கட்டிடம் ஒன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காக,...

26 695b3fa4f317d
செய்திகள்இலங்கை

EPF செலுத்தாத நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை: 3,498 கோடி ரூபாய் நிலுவையை வசூலிக்க அரசு அதிரடி!

இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத்...

26 695b472ef2261
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் தமிழர் நிமோனியாவால் உயிரிழப்பு: சோகத்தில் வட்டுக்கோட்டை!

கனடாவிலிருந்து விடுமுறைக்காகத் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த 42 வயதுடைய நபர் ஒருவர்,...