24 661d40b63ef14
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள்

Share

இலங்கையில் அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள்

இலங்கையில் மாதாந்தம் 25 முதல் 30 இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரிய வந்துள்ளது.

இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் அண்மையில் இனந்தெரியாத நபரொருவால் ஊடுருவப்பட்டது.

இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது குறித்த இணையத்தளம் மீளமைக்கப்பட்டுள்ளதாக நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது இலங்கையில் மாதாந்தம் 25 முதல் 30 இணையத்தளங்கள் இவ்வாறாக இனந்தெரியாத தரப்பினரால் ஊடுருவப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையடுத்து, இவ்வாறான நடவடிக்கைகள் குறித்த மக்கள் அறிந்திருக்க வெண்டுமென்பதோடு அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...