24 66177aeda517e
இலங்கைசெய்திகள்

விவாதத்தின் நோக்கத்தை திசை திருப்பும் ஐக்கிய மக்கள் சக்தி

Share

விவாதத்தின் நோக்கத்தை திசை திருப்பும் ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் விவாதத்திலிருந்து கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalintha Jayatissa) குற்றம் சுமத்தியுள்ளார்.

அறிக்கையொன்றிலேயே அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

குறித்த அறிக்கையில், “தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவே (Anura Kumara Dissanayake ) முதன்முதலாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) விவாதத்திற்கு அழைத்தார் என்பதை நான் நினைவூட்டுகின்றேன்.

2023ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது அனுரகுமார திசாநாயக்க, சஜித்துடன் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இருப்பினும், வெளிப்படுத்தப்படாத சில காரணங்களுக்காக குறித்த விவாத சவாலை சஜித் பிரேமதாச நிராகரித்ததார்.

இந்நிலையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான மாற்று விவாதத்தை தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபையுடன் முன்மொழிந்தனர்.

இந்தநிலையில், அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான சாத்தியமான வேட்பாளர்கள் என்ற அடிப்படையில் விவாதத்தின் முக்கியத்துவத்தை நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...