24 66179e5949742
இலங்கைசெய்திகள்

தந்தையால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட பிள்ளைகள்

Share

தந்தையால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட பிள்ளைகள்

திருகோணமலை (Trincomalee) தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரண்டு பிள்ளைகளை தவறான நடத்தைக்கு உட்படுத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிள்ளைகளின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தம்பலகாமம் சிராஜ் நகர் பகுதியில் வசித்து வரும் முகமது சனுஷ் என்ற 28 வயதுடைய நபரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவி வெளிநாட்டுக்குச் சென்றிருந்த நிலையில் 2 பிள்ளைகளையும் தனது கணவனின் கண்காணிப்பில் விட்டுச் சென்றுள்ள போதே இரு சிறுவர்களும் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரு சிறுவர்களிடமும் வாக்குமூலம் பெற்றதை அடுத்து சந்தேக நபரை கைது செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கந்தளாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த தந்தையால் தவறான நடத்தைக்குட்பட்ட இரண்டு சிறுவர்களும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 20
சினிமாசெய்திகள்

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 19
சினிமாசெய்திகள்

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

சிறந்த வரவேற்பை பெற்ற DNA.. முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அதர்வாவிற்கு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு சிறந்த படமாக...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

நடிகர் ரகுவரனின் மரணத்திற்கு இதுதான் காரணம்.. நடிகர் பப்லு ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன்கள் என பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக ரகுவரனின் பெயர் இருக்கும். பாட்ஷா,...