24 66148cd3bca48
இலங்கைசெய்திகள்

இலங்கையர்களை பணயக்கைதிகளாக வைத்திருந்த பாகிஸ்தானியர்கள்

Share

இலங்கையர்களை பணயக்கைதிகளாக வைத்திருந்த பாகிஸ்தானியர்கள்

நேபாளத்தில் (Nepal) இலங்கையர்களை பணயக் கைதிகளாக வைத்திருந்த பாகிஸ்தானியர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பிலான மோசடி இடம்பெற்றுள்ளதாக நேபாள(Nepal) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேலைக்காக கனடா, ருமேனியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து இலங்கை பிரஜைகள் நால்வரும் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

நேபாளத்தில் (Nepal) இலங்கையர்களை பணயக் கைதிகளாக வைத்திருந்த பாகிஸ்தானியர்கள் நால்வரை கடந்த 4ஆம் திகதி அந்நாட்டு பொலிஸார் கைது செய்திருந்தனர்.

நேபாள பொலிஸின் காத்மாண்டு நகர குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

42 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு பாகிஸ்தானிய பிரஜைகள் இவ்வாறு கைது செய்ப்பட்டுள்ளனர்.

குறித்த இலங்கையர்கள் பாகிஸ்தான் பிரஜைகளால் தாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொலை மிரட்டலுக்கு உள்ளானதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...