24 66143b5c49b70
இலங்கைசெய்திகள்

காசாவில் பாடசாலை அமைக்கப்போகும் ரணில்

Share

காசாவில் பாடசாலை அமைக்கப்போகும் ரணில்

போர் முடிவடைந்த பின்னர் காசா பகுதியில் பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு உறுதியளித்துள்ளதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி, கட்டுகெலே ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “இலங்கை தற்போது ரமழான் நோன்பை அனுஷ்டிக்கின்ற போதும் காசா பகுதியில் மிகவும் சோகமான நிலை ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகம் சுமார் முப்பத்தைந்து உயிர்களை இழந்துள்ளது. அதனால்தான் இந்த ஆண்டு தேசிய ரம்ஜான் பண்டிகையை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்து அந்த பணத்தை காசா முஸ்லிம் மக்களுக்கு வழங்கினோம்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் காசா பகுதியில் பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதாகவும் உறுதியளித்துள்ளோம். பலஸ்தீன அரசின் அழிவை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்.

எனவே, இந்தப் போரை நிறுத்துவதற்கு நாங்கள் ஆதரவை வழங்குகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...