24 66143b5c49b70
இலங்கைசெய்திகள்

காசாவில் பாடசாலை அமைக்கப்போகும் ரணில்

Share

காசாவில் பாடசாலை அமைக்கப்போகும் ரணில்

போர் முடிவடைந்த பின்னர் காசா பகுதியில் பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு உறுதியளித்துள்ளதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி, கட்டுகெலே ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “இலங்கை தற்போது ரமழான் நோன்பை அனுஷ்டிக்கின்ற போதும் காசா பகுதியில் மிகவும் சோகமான நிலை ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகம் சுமார் முப்பத்தைந்து உயிர்களை இழந்துள்ளது. அதனால்தான் இந்த ஆண்டு தேசிய ரம்ஜான் பண்டிகையை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்து அந்த பணத்தை காசா முஸ்லிம் மக்களுக்கு வழங்கினோம்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் காசா பகுதியில் பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதாகவும் உறுதியளித்துள்ளோம். பலஸ்தீன அரசின் அழிவை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்.

எனவே, இந்தப் போரை நிறுத்துவதற்கு நாங்கள் ஆதரவை வழங்குகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...