24 661363fa8289d
இலங்கைசெய்திகள்

தொடருந்து பயணங்களுக்கு ஈ-டிக்கெட் முறை

Share

தொடருந்து பயணங்களுக்கு ஈ-டிக்கெட் முறை

இந்தாண்டுக்குள் தொடருந்து பயணங்களுக்கு ஈ-டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த தொடருந்து திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தொடருந்து திணைக்கள பொது மேலாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார தெரிவித்துள்ளார்.

19 மில்லியன் டொலர் செலவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில காலமாக நடைமுறைப்படுத்தப்படாத இத்திட்டத்தின் பணிகளை துரிதப்படுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய, இந்த திட்டப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக, அடுத்த 5 மாதங்களுக்குள் தொடருந்து டிக்கெட்டுகளுக்கு QR குறியீடு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
21 3
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேசிக்காயின் விலை

இலங்கையில் தேசிக்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதன்படி, ஒரு கிலோ கிராம் தேசிக்காய்...

20 5
இலங்கைசெய்திகள்

விடுதலை புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா புகழாரம்

போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர்...

19 6
இந்தியாசெய்திகள்

கரூர் விவகாரத்தில் புதிய திருப்பம்: உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

18 7
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கும் அமைச்சர் பதவி..!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், மகிந்தவின் அரசில் அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும்...