24 6611df724a315
இலங்கைசெய்திகள்

அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

Share

அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போலி நாணயம் மற்றும் வழிப்பறி வியாபாரிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

சிங்கள மற்றும்தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் பல்வேறு பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்வதாக தெரிவித்த பொலிஸார், பல்வேறு கடத்தல்காரர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, பண்டிகைக் காலங்களில் மக்கள் சுற்றுலா செல்ல வேண்டிய விதம் குறித்தும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.

“புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துவிட்டு, வெளியில் வாகனங்களில் செல்லும் போது வாகனத்தை ஓட்டுபவர் மது அருந்தினாரா, அதிவேகமாக பயணிக்கிறாரா, மற்றும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்கின்றாரா என்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

சாரதி மது அருந்தியிருப்பது தெரிந்தால், போக்குவரத்து விதிகளை மீறி பயணம் செய்வது தெரிந்தால் 1969 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது குடும்ப உறுப்பினர்களுடன் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக சுகாதார இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு வெடிப்பதால் ஒவ்வொரு வருடமும் விபத்துக்கள் பதிவாகி வருவதாகவும், எனவே புத்தாண்டு காலத்தில் கவனமாக இருக்குமாறும் என சுகாதார இராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...