Connect with us

இலங்கை

கோட்டாபய ஆயுதங்களை தூக்காமல் பொறுமை காத்தது ஏன்..! காலம் கடந்து தகவல்

Published

on

24 660b3ad373ca7

கோட்டாபய ஆயுதங்களை தூக்காமல் பொறுமை காத்தது ஏன்..! காலம் கடந்து தகவல்

அரசாங்கம் வீழ்ச்சியடைந்தாலும் நாடு சீர் குலைவதற்கு அனுமதிக்க முடியாது என்பதாலேயே, 69 இலட்சம் மக்களின் ஆணை இருந்தும் அதிபர் கோட்டாபய ராஜபக்‌ச தோட்டாக்கள், ஆயுதங்களால் போராட்டத்தை ஒடுக்கவில்லையென சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அமைப்பாளரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் கடந்த (30) ஆம் திகதி தங்காலை நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு அரசாங்கம் கவிழ்ந்தால் அதனை மீட்டுவிடலாம், ஆனால் ஆட்சி கவிழ்ந்தால் அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம். அதனால்தான், கோட்டாபய ராஜபக்ச போராட்டத்தை ஆயுதங்களால் அடக்கவில்லை.

துரதிர்ஷ்டவசமாக, 2015க்குப் பிறகு நியமிக்கப்பட்ட பல அரசாங்கங்கள் நாட்டின் வளர்ச்சி இலக்குகளை அடையத் தவறிவிட்டன. பின்னர் மீண்டும் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அரசாங்கத்தை ஆரம்பித்தோம், ஆனால் அது பல்வேறு சதிகாரர்களால் அழிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

அண்மையில், மத்தள விமான நிலையம் தனிமைப்படுத்தப்பட்ட போது நாம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். சிறை சென்றோம். அதற்காக இப்போதும் மத்தள விமான நிலையத்தை தனியார் மயமாக்குவது பற்றி மீண்டும் கலந்துரையாடி வருகின்றோம். நாம் விமான நிலையத்தை அமைத்தமை நெல்லை சேமித்து வைப்பதற்காக அல்ல.

இதேபோன்று துறைமுகம் அமைக்கப்பட்டமை தங்களுடைய சொந்த உடைமை மாற்றத்திற்காக அல்ல. அதிவேக நெடுஞ்சாலை உணவை கொண்டு செல்வதற்காக அமைக்கப்படவில்லை.

முகப்புத்தகத்தில் படங்களை போடுவதற்காக நாங்கள் தாமரை கோபுரத்தை அமைக்கவில்லை. நாட்டின் அபிவிருத்தியை முன்நிலைப்படுத்தியே எமது அரசாங்கத்தின் கீழ் இவற்றை ஆரம்பித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 16 Rasi Palan new cmp 16
ஜோதிடம்20 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 29, 2024, குரோதி வருடம் சித்திரை 16, திங்கட் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள கிருத்திகை சேர்ந்தவர்களுக்கு...

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 28, 2024, குரோதி வருடம் 15,...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 26, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 24, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan\ இன்றைய ராசிபலன் ஏப்ரல் 23, 2024, குரோதி வருடம் சித்திரை...