24 660b731f1cf1c
இலங்கைசெய்திகள்

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட நடிகை மற்றும் கணவனை கைது செய்ய முடியாமல் திணறும் பொலிஸார்

Share

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட நடிகை மற்றும் கணவனை கைது செய்ய முடியாமல் திணறும் பொலிஸார்

30 லட்சம் ரூபா மோசடி தொடர்பில் நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் லென்லி ஜோன்சன் ஆகியோரை கைது செய்ய முடியாமல் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திணறுவதாக தெரியவந்துள்ளது.

6 நாட்களுக்கு முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொரலஸ்கமுவவில் உள்ள தமிதா அபேரத்னவின் வீட்டிற்கு சென்றிருந்த போதிலும், இருவரும் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரியாவுக்கு அனுப்புவதாகக் கூறி 30 இலட்சம் ரூபாவை ஏமாற்றியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமித அபேரத்ன தம்பதியினரின் நிலுவையில் இருந்த பிணை விண்ணப்பத்தை கடந்த 27ஆம் திகதி நீதவான் திலின கமகே நிராகரித்தார்.

அதற்கமைய சந்தேக நபர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட பொலிஸ் குழு பொரலஸ்கமுவ பபிலியான இல்லத்திற்குச் சென்றது. ஆனால் இருவரும் வீட்டில் இல்லை. தமிதா அபேரத்னவின் தாய் மட்டுமே வீட்டில் இருந்தார்.

எவ்வாறாயினும், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அன்றைய தினம் இரவு முதல் மறுநாள் பிற்பகல் வரை அவரது வீட்டிற்கு அருகில் தங்கியிருந்த போதும் ஏமாற்றத்துடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு திரும்பியதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

Share
தொடர்புடையது
pic
உலகம்செய்திகள்

எச்-1பி விசா கட்டண உயர்வு: டிரம்ப் நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு – இந்திய ஊழியர்களுக்கு ஆறுதல்!

அமெரிக்காவில் தங்கிப் பணிபுரிய வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி (H-1B) விசா கட்டணத்தை கடந்த மாதம்...

1334083
உலகம்செய்திகள்

சென்னையில் அமோக தீபாவளி விற்பனை: பட்டாசு குப்பைகள் 151 மெட்ரிக் டன் அகற்றப்பட்டன!

தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து இன்று வரை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி...

image 1843c289c1
செய்திகள்இலங்கை

5 வயது சிறுமி சித்திரவதை: தாயின் கள்ளக்காதலன் கொடூரம்! – சந்தேக நபர் தலைமறைவு!

மட்டு. கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த, கணவரைப் பிரிந்து வாழும் 23 வயது பெண்ணின் 5 வயது...

24 671602c72b24d.webp
செய்திகள்இந்தியா

யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை 38ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: 68 பேருக்கு அஞ்சலி!

இந்திய இராணுவத்தினரால், யாழ். போதனா வைத்தியசாலையில்  சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் 38வது நினைவு தினம் இன்று (அக்...