24 660783d30acc7
இலங்கைசெய்திகள்

கொழும்பு – வெள்ளவத்தை பகுதி மக்களுக்கு வெளியான அறிவித்தல்

Share

கொழும்பு – வெள்ளவத்தை பகுதி மக்களுக்கு வெளியான அறிவித்தல்

கரையோர தொடருந்து மார்க்கத்தில் இன்றும் நாளையும் தொடருந்து சேவைகள் தாமதமாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை தொடருந்து திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்துள்ளார்.

தொடருந்து மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல் குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் காரணமாக கரையோர தொடருந்து மார்க்கத்தில் இன்றும் நாளையும் தொடருந்து சேவைகள் தாமதமாக இடம்பெறும்.

இதற்கமைய கரையோர தொடருந்து மார்க்கத்தில் இன்றைய தினம் 25 தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கொழும்பில் இருந்து வெள்ளவத்தை வரை ஒரு மார்க்கத்தில் மாத்திரம் தொடருந்து சேவை இடம்பெறுவதாகவும் தொடருந்து திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...