24 660799b4c9dbe
இலங்கைசெய்திகள்

ராஜபக்சர்களால் கைவிடப்பட்ட கருணா! ரணிலிடம் சரணாகதி

Share

ராஜபக்சர்களால் கைவிடப்பட்ட கருணா! ரணிலிடம் சரணாகதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஆதரவளிக்கப் போவதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா)(Vinayagamoorthi Muralidaran) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில்(Batticaloa) நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, அம்மான் படையணி என்ற புதிய படையணி ஒன்றை தான் உருவாக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் அரசியலில் தீவிரமாக இயங்கிய கருணா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததுடன் செயற்பாட்டு ரீதியாக தீவிர அரசியலில் ஈடுபடவில்லை.

மேலும், ராஜபக்சர்களின்(Rajapaksa Family) தீவிர ஆதரவாளனாகவும் கருணா செயற்பட்டு வந்த நிலையில், தற்போது அவர்களால் கைவிடப்பட்ட ஒருவராக அடையாளப்படுத்தப்படுகின்றார்.

இந்தநிலையிலேயே தற்போது இலங்கையில் இரண்டு பிரதான தேர்தல்கள் நடத்தப்படவுள்ள சூழ்நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கு தான் ஆதரவு தெரிவிக்கப்போவதாக கருணா அறிவித்துள்ளமை குறிப்பிடத்கத்கது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...