24 6603894854c84
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாமல் தகவல்

Share

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாமல் தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்டசியின் சார்பில் நான்கு அல்லது ஐந்து வேட்பாளர்கள் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒரு பிரதேச சபைக்கு கூட வேட்பாளர்களை காண முடியாது என கூறிய கட்சி இன்று ஜனாதிபதி தேர்தலில் பல வேட்பாளர்களை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் கட்சியை நம்பி உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.

அதற்கமைய, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் பொது வேட்பாளரை முன்வைக்கத் தயார். அந்த வேட்பாளர் யார் என்பதை கட்சி ரீதியாக இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் நாமல் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
01 10
செய்திகள்உலகம்

ஈரான் போர்: அமெரிக்க இராணுவத்தினர் காயமடைந்தது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’...

30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...