24 6603bd3c2f086
இலங்கைசெய்திகள்

அரச வாகனங்கள் தொடர்பில் தகவல்

Share

அரச வாகனங்கள் தொடர்பில் தகவல்

இலங்கையில் அரச வாகனங்கள் ஒரு கிலோமீட்டர் இயங்க 300 ரூபாயை செலவிடுகின்ற நிலையில், அந்த வாகனங்களை 100 ரூபா செலவில் இயக்க முடியும் என எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறை மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது வள மேலாண்மை குறித்த மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் துறையால் தயாரிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் தரவுகளின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2022ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, அரசாங்க நிறுவனங்கள் சுமார் 82,000 வாகனங்களை வைத்திருக்கின்றன. அவற்றில் சுமார் 76,000 இயங்கும் நிலையில் உள்ளன. சுமார் 5500 வாகனங்கள் இயங்கும் நிலையில் இல்லை.

ஆராய்ச்சியின் படி, இயங்கும் நிலையில் உள்ள வாகனங்களை ஒரு கிலோமீட்டர் செலுத்துவதற்கு 300 மற்றும் 500 ரூபா வரை அரச நிறுவனங்களுக்குத் தேவைப்படும்.

எனினும், இந்த வாகனங்களை தனியாரிடம் இருந்து வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் எடுத்தால் ஒரு கிலோமீட்டருக்கு 100 அல்லது அதற்கும் குறைவான தொகையே செலவாகும்.

எனவே அரசுக்கு சொந்தமான வாகனங்களை அகற்றி இந்த செயல்முறையைப் பின்பற்றினால் சுமார் 20 பில்லியன் ரூபா அரச செலவீனங்களை சேமிக்க முடியும் என்றும் குறித்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...