24 6600cbeb53f23
இலங்கைசெய்திகள்

ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் மீண்டும் சேவையில் இணைப்பு

Share

ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் மீண்டும் சேவையில் இணைப்பு

ஓய்வு பெற்றுக்கொண்ட ஆங்கில பாட ஆசிரியர்கள் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.

நாட்டில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நோக்கில் இவ்வாறு ஓய்வு பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள் மீளவும் கடமையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர்.

தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கு கற்பிக்கும் நோக்கில் ஓய்வு பெற்றுக்கொண்ட ஆங்கில பாட ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர்.

ஆசிரியர்களை நியமிக்கும் நோக்கில் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பிலான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்றுக்கொண்ட போது செலுத்தப்பட்ட சம்பளத்திற்கு மேலதிகமாக இவர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னதாக இந்த ஆங்கில பாட ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மேல் மாகாணத்தில் இணைத்துக்கொள்ளப்பட உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை ஐயாயிரமாக அதிகரிக்கப்பட உள்ளது.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...