tamilnaadi 130 scaled
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பில் தகவல்

Share

வாகன இறக்குமதி தொடர்பில் தகவல்

இந்த ஆண்டு வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என முன்னாள் நிதி அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாகன இறக்குமதி தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்படுகின்றது. ஆனால் இந்த ஆண்டு வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

ஏனென்றால் அதற்காக பல பில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றது. 5%-10% தேவையை பூர்த்தி செய்ய சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இருப்பினும், சுற்றுலாத் துறையில் தேவை இருந்தால் அதை கருத்திற்கொண்டு செயற்படுவது தவறில்லை.

தற்போது வயிற்றைப் பற்றி நினைக்காமல் நாட்டைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து கடைசியில் வயிறு, நாடு இரண்டையும் இழந்தபோது, ​​சவாலை ஏற்க யாரும் முன்வரவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சவாலை ஏற்றுக்கொண்டார்.

இப்போது நாடு நிதி ஒழுக்கத்துடன் சரியான பாதையில் செல்கின்றது. மக்களுக்கு சிரமங்கள் உள்ளன. இல்லை என்று அர்த்தம் இல்லை. ஆனால் பற்றாக்குறை நீக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியை ஒரேயடியாக தீர்க்க முடியாது. ஆனால் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

“அண்ணே, கடனை அடைக்க எனக்கு வழியில்லை. பிற்காலத்தில் தருகின்றேன் என்று சொல்லி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

எமது காலத்தில் 20 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அவை வருமானத்தை அதிகரிக்கும் முறையுடன் செய்யப்பட்டுள்ளன.

எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின பேரணியை மாபெரும் வெற்றியடையச் செய்வதற்கு கட்சியின் அமைப்பாளர்கள் அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்த நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்வதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றுள்ளதாகவும், வெளிநாட்டு கையிருப்பு 5 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும், அதன் மூலம் மக்கள் பயனடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வெற்றியை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளதாகவும் எனவே சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை நிச்சயம் கிடைக்கும் எனவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...