tamilni 310 scaled
இலங்கைசெய்திகள்

இந்திய நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் வெளியாகவுள்ள அறிவிப்பு

Share

இந்திய நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் வெளியாகவுள்ள அறிவிப்பு

இந்திய நாடாளுமன்ற தேர்தல் திகதி குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடிக்கிவிட்டுள்ளன.

கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து தொகுதி பங்கீடு வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்நியாவின் ஆளும் கட்சியான பாஜக 2 கட்டமாக 267 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியும் 2 கட்டமாக 82 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல்களை வெளியிட்டுள்ளது. இதே போன்று இந்திய கம்யூனிஸ்ட் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்த வண்ணம் உள்ளன.

இதற்கமைய வெற்றிடமாக இருந்த தேர்தல் ஆணையர் மற்றும் பதவி விலகிய செய்த தேர்தல் ஆணையர் அருண் கோயல் ஆகியோர் பதவிகளுக்கு நேற்று புதிதாக 2 தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்விர் சிங் சாந்து ஆகியோர் இன்று காலை பதவியேற்றுற்றனர்.

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 2024 பொதுத் தேர்தலுக்கான தேதிகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...